search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் மீது கல்வீச்சு"

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்த தகவலால் கடலூரில் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது. #karunanidhi #dmk

    கடலூர்:

    உடல்நலம் பாதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அவருடைய உடல் நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் பஸ்நிலையத்தில் இருந்து பண்ருட்டிக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கோண்டூர் அருகே சென்றபோது திடீரென மர்ம மனிதர்கள் சிலர் அந்த பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.

    பின்னர் அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கபட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து பஸ் டிரைவர் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பஸ்கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடிய மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கடலூரில் அரசு பஸ்கள் அனைத்தையும் பணிமனைக்குள் நிறுத்தி வைக்க போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதையடுத்து அரசு பஸ்கள் அனைத்தையும் டிரைவர்கள் பணிமனையில் கொண்டு வந்து நிறுத்தினர்.

    அதேபோல் பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற பஸ்களும் பாதி வழியிலேயே திரும்பி வந்தன. கடலூர் பஸ்நிலையத்தில் இருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த பஸ் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே சென்றபோது திரும்பி மீண்டும் கடலூர் பஸ் நிலையத்துக்கு வந்தது.

    அப்பாது பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகள் தங்களது பயண கட்டணத்தை திரும்ப தரக்கோரி கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த திருப்பாதிரிப்புலியூர் சப்-இன்ஸ்பெக்டர் பரணீதரன் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி பயணிகளுக்கு பயண கட்டணத்தை திருப்பி கொடுக்கும்படி கூறினார். பயணிகளுக்கு கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று இரவு பதட்டமான சூழ்நிலை நிலவியது. உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் குவிந்தனர். பின்னர் அவர்கள் அந்த வழியாக வந்த பஸ்களை மறித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் டிரைவர்கள், வந்த வழியிலேயே பஸ்களை எடுத்து சென்றனர். பஸ்சுக்காக பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தி.மு.க.வினரை சமாதானப்படுத்தினர். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    நேற்று இரவு உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடிக்கு சென்ற போலீசார் அங்கு பணியில் இருந்த ஊழியர்களின் பாதுகாப்பு கருதி சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு தடுப்பு கட்டை இல்லாமல் திறந்து வைக்கப்பட்டது.

    நேற்று இரவில் இருந்தே அனைத்து வாகனங்களுக் கும் கட்டணம் வசூலிக்கப்படாமல் செல்கின்றன.

    இதேபோல் திருவெண்ணைநல்லூர் பகுதியிலும் தி.மு.க.வினர் சிறிது நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டி ருந்தது. பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கபட்டிருந்தனர். #karunanidhi #dmk

    கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது கல்லூரி பஸ் மீதும் கற்கள் வீசப்பட்டது.

    மதுரை:

    மதுரை விளாச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு அபராதம் விதிப்பது, செல்போனில் பேச அனுமதி மறுப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    மேலும் கல்லூரியில் உள்ள தனியார் ஒப்பந்த காவலாளிகள் அடிக்கடி சோதனை என்ற பெயரில் நிறுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மாணவ -மாணவிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் அவர்கள் திரண்டு நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்றனர். இந்த நேரத்தில் கல்லூரி வளாகத்தில் கல்லூரி பஸ் மீது கற்கள் வீசப்பட்டது. இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தன.

    இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை அறிவித்தது. அதன் பின்னர் மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர்.

    ×